Posted by : kayalislam
Sunday, 25 November 2012
இரு கண்கள் நம் ஹஸன் ஹூஸைன் வாழ்வே
அதை சொல்கின்றேன் உவந்து கொள்வீரே
பெரும் கர்பலாவை கண்ட தியாக பாடமாகுமே
புனித தீனோரே கேளும் நீரே
இறையோனின் தூதர் நபி பேரர்களாய்
இகமீது வந்தார்கள் இரு கண்களாய்
இஸ்லாத்தின் அலி ஃபாதிமா தங்களின்
இதயம் நிறை அன்பு செல்வங்களாய்
குறை யின்றியே வந்த நிறை ஜோதியை
கொடியோர்கள் கொன்றனரே கொடுமையாகும் இது
தீனோரே கேளும் நீரே
( இரு கண்கள் )
ஜனநாயகம் தழைக்க போராடியே
ஜகமீதிலே அணிந்தார் போர்க் கோலம்
சர்வதிகாரி யஜீது அறியாமையை
சீராய் சமாதான வழி மூலம்
தனதாகவே கேட்டு விளங்காமலே
தயவின்றி போர் தொடுத்தார் உமைய்யா கூட்டத்தினர்
தீனோரே கேளும் நீரே
( இரு கண்கள் )
சிறுபான்மை முஸ்லிம்கள் சிதறுண்டனர்
சிசுவோடு பெண்பாலும் மாய்ந்தாரே
சொல்லும் புராத் நதி நீருண்ணவும்
சண்டாளர் உதவாமல் செய்தாரே
ஆராத தேதாகம் தீராததே
அம்மம்மா என்சொல்வேன் அவர்கள் துன்ப நிலை
தீனோரே கேளும் நீரே
( இரு கண்கள் )
அருமை ஹூஸைனாரின் தலை வீழவே
அநியாயம் செய்தானே ஷிம்ரென்போன்
அல்லாஹ் அக்பர் என்று தான் கூறியே
அமரத்துவம் கண்டார்கள் அங்கே தாம்
பெருமை கொண்டான் அவன் சிறுமை தன்னில்
பொல்லாத சூழ்நிலையே பாடும் கர்பலாவில்
தீனோரே கேளும் நீரே
( இரு கண்கள் )
பெருமானார் முத்தமிட்ட அதரங்களில்
பிரம்பால் அடித்தோர்கள் தீயோர்கள்
பேராசை கொண்ட கூஃபா நகர்வாசிகள்
பண்பின்றியே காட்டி தந்தார்கள்
சரியாகுமா? இது முறையாகுமா?
ஜெய்னுல் ஆபிதீனை தவிர யாருமில்லை
தீனோரே கேளும் நீரே
( இரு கண்கள் )