Posted by : kayalislam Wednesday, 8 August 2012




அண்ணல் நபி பொன் முகத்தை கண்கள் தேடுதே
அந்த ஆவலினால் காவலின்றி இதயம் வாடுதே

நீரிருக்கும் தாமரை போல் நெஞ்சம் மலருதே
அண்ணல் நேசத்துக்கும் பாசத்துக்கும் கண்கள் ஏங்குதே
யார் இதனை அங்கு வந்து எடுத்துச் சொல்வது
உங்கள் அழைப்பிற்காக எனது மனம் ஏங்கி துடிக்குது

இறுதி தூதின் நுபுவத்தொளிரும் தங்கள் முதுகிலே
முத்தமிடுவதற்கும் தொடுவதற்கும் இதழ்கள் துடிக்குதே
தாயிஃப் நகர் கல்லடிகள் தந்த தழும்பிலே
இமைகள் தழுவதற்கும் அழுவதற்கும் கண்ணீர் பொங்குதே

கஸ்தூரி மனம் கமழும் தங்கள் மேனியை
இந்த கண்களாலே பருகுகின்ற ஆவல் தழும்புதே
புஷ்பங்களின் மகரந்தமாய் மதீனப் புழுதியில்
நான் புரள வேண்டும் உருள வேண்டும் போலிருக்குதே

{ 3 comments... read them below or Comment }

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அண்ணல் நபி பொன் முகத்தை கண்கள் தேடுதே
    அந்த ஆவலினால் காவலின்றி இதயம் வாடுதே

    நீரிருக்கும் தாமரை போல் நெஞ்சம் மலருதே
    அண்ணல் நேசத்துக்கும் பாசத்துக்கும் கண்கள் ஏங்குதே
    யார் இதனை அங்கு வந்து எடுத்துச் சொல்வது
    உங்கள் அழைப்பிற்காக எனது மனம் ஏங்கி துடிக்குது

    தென்றல் அதை தூது விட்டேன் திரும்ப வில்லையே
    என் சிந்தையிலே ஆவல் இன்னும் குறையவில்லையே
    என்னை உங்கள் அன்பு உள்ளம் ஏன் மறந்ததோ
    நெஞ்சில் இறக்கம் வைத்து எனை அழைக்க மனது வல்லையோ

    இறுதி தூதின் நுபுவத்தொளிரும் தங்கள் முதுகிலே
    முத்தமிடுவதற்கும் தொடுவதற்கும் இதழ்கள் துடிக்குதே
    தாயிஃப் நகர் கல்லடிகள் தந்த தழும்பிலே
    இமைகள் தழுவதற்கும் அழுவதற்கும் கண்ணீர் பொங்குதே

    கஸ்தூரி மனம் கமழும் தங்கள் மேனியை
    இந்த கண்களாலே பருகுகின்ற ஆவல் தழும்புதே
    புஷ்பங்களின் மகரந்தமாய் மதீனப் புழுதியில்
    நான் புரள வேண்டும் உருள வேண்டும் போலிருக்குதே

    ReplyDelete

Powered by Blogger.

Facebook Fans

Related Posts Plugin for WordPress, Blogger...

Advertise Here

Site Updates

About Me

Sample Text

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2015 Kayalislam.com | All Rights Reserved.