Posted by : kayalislam Friday, 20 January 2012




ஏகோனின் தூதரே யா ரஸூலல்லாஹ்
எழிலான நேசரே யா ஹபீ பல்லாஹ்
எம் நெஞ்சில் வாழுவீர் யாஷஃபியல்லாஹ்
ஏந்தினோம் கரங்களை யா நபியல்லாஹ்
                                                                                                    ( ஏகோனின் தூதரே )

விரல்களில் விண்ணப்பம் உம்மை அணுகவே
விழிகளிலும் தேடுதே வதனம் காணவே
பாதமே பணியவே பாசம் தேடுதே
முத்தவே முஹம்மதே இதழ்கள் துடிக்குதே
                                                                                                    ( ஏகோனின் தூதரே )

ஊனிலே உயிரிலே உறைந்த நாயகம்
உம்மன்றி பாரிலே யார் எமக்குண்டு
உம்மத்தீ உம்மத்தீ என்று தேடிடும்
தேன் சுவை தென்றலே யாரஸூலல்லாஹ்
                                                                                                    ( ஏகோனின் தூதரே )

அண்ணலே அவனியில் உதித்த நாளிதே
கன்னலே கண்களில் காட்சி தருவீரே
மண்ணிலும் அதிகமே பாவம் போக்குவீர்
அடியவர் அகந்தனில் அழுக்கை நீக்குவீர்
                                                                                                    ( ஏகோனின் தூதரே )

வெண்ணிலா தன்னொளி ஜோதி நாயகம்
மெய்யிலே மேவியே வீசுதே மணம்
மேதினி மீதிலே உதித்த நாயகம்
மேன்மையை வழங்கவே ஏந்தினோம் கரம்
                                                                                                    ( ஏகோனின் தூதரே )

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Powered by Blogger.

Blog Archive

Facebook Fans

Related Posts Plugin for WordPress, Blogger...

Advertise Here

Site Updates

About Me

Sample Text

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2015 Kayalislam.com | All Rights Reserved.